districts

வடமழை மணக்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

வேதாரண்யம், டிச.29- நாகை மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த வட மழை மணக்காடு ஊராட்சி யில் கிராம வளர்ச்சித் திட்ட அறிக்கை தயார் செய்தல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.சி. சரவணன் தலைமை வகித்தார்.  இந்தக் கூட்டத்தில் கிராமப்புற சாலைகள், குடிநீர், பொதுமக்கள் குளிப்பதற்கு குளங்களுக்கு படித்துறை, சிமெண்ட் பாலம் கட்டாத வாய்க்கால் பகுதியில் மரப்பாலம் அமை ப்பது, கால்நடை மருத்துவ மனை, கிராமப்புற சுகாதார நிலையம், நூறு நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பொதுமக்களின் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டன.