districts

img

கல்லணைக் கால்வாயில் மூழ்கி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பலி

தஞ்சாவூர், செப்.19 -  தஞ்சாவூர் அருகே வியா ழக்கிழமை நாயையும், மகனையும் காப்பாற்றுவ தற்காக கல்லணைக் கால்வாய்க்குள் இறங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் சீனிவாச புரம் அருகே செவ்வப்ப நாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி.ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வா ளராகப் பணியாற்றி வந்தார். இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவர் வீட்டில் வளர்க்கும் நாயைக் குளிப்பாட்டுவதற்காக தனது மகன் ராகுல், மகள் லாவண் யாவுடன் காரில் தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட் டை மானோஜிபட்டி பாலம் அருகே கல்லணைக் கால் வாய்க்கு வியாழக்கிழமை முற்பகல் சென்றார். கால்வாயில் குளிப்பாட் டப்பட்ட நாய் பள்ளத்துக்கு சென்றதால், அதைக் காப் பாற்றுவதற்காக ராகுல் சென்றார். இருவரும் தண்ணீ ரில் சிக்கியதைப் பார்த்த ராஜாவும் ஆற்றுக்குள் இறங்கி மீட்க முயன்றார். ஆனால், கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கிய ராஜா அடித்துச் செல்லப்பட்டார். கரையில் இருந்த பொதுமக்கள் கால் வாயில் இறங்கி ராகுலை யும், நாயையும் காப்பாற்றி னர். இதையடுத்து, ராஜாவை தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளிட் டோர் தேடி வந்த நிலை யில், கண்டிதம்பட்டு பகுதி யில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப் பட்டது. இது குறித்து கள்ளப் பெரம்பூர் காவல்துறையினர்  வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.