districts

திருச்சி முக்கிய செய்திகள்

வரலாறு காணாத மழையால் பாதிப்பு  தென் மாவட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

முதல்வருக்கு கைத்தறி சம்மேளனம் வேண்டுகோள்

கும்பகோணம், டிச.20 -  வரலாறு காணாத மழையால் பாதித்த  தென் மாவட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு  ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென சிஐடியு கைத்தறி சம்மே ளனம் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு கைத்தறி நெசவா ளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் என். பி.நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 100 ஆண்டுகள் இல்லாத வகை யில், ஒரு மாதமாக மழை விட்டுவிட்டு பெய்து  வருகிறது. இதனால் தமிழக தென் மாவட்டங் களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென் காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு  ஆளாகியுள்ளனர். மழை வெள்ளத்தால் வீடு களுக்குள் வெள்ளம் புகுந்து, உடைமை களை இழந்து பெரும் துயரத்தை சந்தித்து  வருகின்றனர். இம்மாவட்டங்களில் கைத்தறி நெசவா ளர் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். மழைக்காலத்தில் கைத்தறி நெய்ய முடி யாது. இந்த மழை, வெள்ளம் கைத்தறி நெச வாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உடைமை களை இழந்து தவிக்கும் தென் மாவட்ட நெச வாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க  அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிச.23 கரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கரூர், டிச.20 - டிசம்பர் 23 அன்று கரூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட  நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.12.2023 (சனிக்கிழமை) அன்று தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் காலை  8 மணி முதல் மாலை 3 வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில்  8 முதல் 12 ஆம் வகுப்பு வரை முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ,  பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய  விவர குறிப்பு, உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதார்  அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். இம்முகா மில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு  செய்து கொள்ளலாம். வேலை அளிப்போரும், வேலை நாடுநர்களும் முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு, 97891-23085 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்  மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.

வருவாய் கிராம ஊழியர்கள்  விடுப்பு எடுத்து போராட்டம்

அரியலூர், டிச.20- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் கிராம ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1993 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்  காலத்தில் கொண்டு வரப்பட்ட கருணை அடிப்படை யிலான வேலையை மீண்டும் நடைமுறைப்படுத்த  வேண்டும். அரசு ஊழியர் பட்டியலில் வருவாய்  கிராம ஊழியர்களை டி பிரிவில் இணைக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரியலூரில் அச்சங்கத்தின் மாவட்டத் தலை வர் காமராஜ் தலைமையில் 32 பேரும், ஜெயங்கொ ண்டத்தில் வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை யில் 30 பேரும் என 62 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியாக நலவாரியம் அமைக்க  ஒலி பெருக்கி அமைப்பாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.20 -  தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என ஒலிபெருக்கி அமைப்பா ளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை, சீதாம்பாள்புரத்தில் தமிழ்நாடு  மைக் செட் நண்பர்கள் நலச் சங்கத் தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சியில், மாநில ஒழுங்கு நட வடிக்கை குழு தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் சேர்மன் எம்.வரதராஜன், கௌரவ தலைவர் கே.ஆர்.வடி வேல், தலைவர் கே.செல்வம், செயலா ளர் எஸ்.அந்தோணி யேசுதாஸ் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மு.த.முகிலன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் கா.அண்ணாதுரை, பேராவூரணி  சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மணிமாறன் நன்றி கூறினார்.  இவ்விழாவில், தமிழ்நாடு முழு வதும் இருந்து ஆயிரக்கணக்கான ஒலி  மற்றும் ஒளி, பந்தல், மேடை அலங்கா ரம், வாடகைப் பாத்திரக் கடை அமைப் பாளர்கள் கலந்து கொண்டனர்.  இதில், “தமிழகம் முழுவதும் உள்ள  திருமணம் சார்ந்த தொழிலில் ஈடு பட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் நலம் காக்க, தனியாக நல வாரி யம் அமைக்க வேண்டும். இத்தொழி லில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிக் கடன்  வழங்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  விழா ஏற்பாடுகளை தஞ்சை, நாகை,  திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட சங்கத்தினர் செய்திருந்தனர்.

புகையிலை பொருட்கள் விற்பனை:  6 கடைகளுக்கு சீல் வைப்பு

அரியலூர், டிச.20- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில்  அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை  செய்யப்படுகிறதா என அரியலூர் உணவு பாதுகாப்புத் துறை  நியமன அலுவலர் வரலட்சுமி மற்றும் உடையார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையி லான போலீசார் உடையார்பாளையம் பகுதிகளில் சோதனை யில் ஈடுபட்டனர்.  அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டிக் கடை, மளிகைக் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.  அதன்பேரில் அந்தந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தி யதில், உடையார்பாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கர் என்பவரது பெட்டிக் கடை, உடையார் பாளையம் கடைவீதியில் வெங்கடேசன் என்பவரது பெட்டிக் கடை, இடையாறு கிராமம் மேற்குத் தெருவில் சின்னதுரை என்பவரது பெட்டிக் கடை, வானதிரையன்பட்டினம் நடுத்தெரு வைச் சேர்ந்த உதயகுமார் என்பவரது மளிகைக் கடை, வான திரையன்பட்டினம் தெற்குத் தெருவைச் சேர்ந்த அலமேலு என்பவரது மளிகைக் கடை, சுத்தமல்லி பள்ளிக்கூட தெரு கிருஷ்ணமூர்த்தி என்பவரது பெட்டிக் கடை என ஆறு கடை களுக்கு சீல் வைக்கப்பட்டது.

குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்

திருச்சிராப்பள்ளி, டிச.20 - திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் புத னன்று நடந்தது.  குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் துளசி பார்மசி  இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ பரி சோதனை மற்றும் ஆலோசனை முகாமை மாவட்ட நீதிபதி  கே.பாபு, தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனா  சந்திரா மற்றும் நீதிபதிகள் சிவகுமார், பாலாஜி ஆகியோர்  துவக்கி வைத்தனர். முகாமில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, கண் பரி சோதனை மற்றும் ஆலோசனை, பல் மருத்துவம், நுரை யீரல் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை, இ.சி.ஜி.  பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன.

ஜெயங்கொண்டம் அருகே  போலி மருத்துவர் கைது 

அரியலூர், டிச.20 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மருந்து கடை வைத்துக் கொண்டு ஆங்கில மருத்து வம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்த னர்.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிக் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்குபங்சர் மருத்துவ ரான கார்த்திகேயன் (42). இவர் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே குளத்தூர் கைகாட்டியில் அக்கு பங்சர் மருத்துவம் பார்த்துக் கொண்டு அருகிலேயே மருந்து கடை நடத்தி வருகிறார்.  இவர் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம்  பார்த்து வருவதாக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவ மனை மருத்துவர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தினர். விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதனையடுத்து கார்த்திகேயனை தேடி வந்த நிலையில், அவர் செவ்வா யன்று கைது செய்யப்பட்டார்.  மேலும் இவர் மீது உளுந்தூர்பேட்டை, மீன்சுருட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் போலி மருத்துவம்  பார்த்ததாக வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்ட வர் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர் மருத்துவம் பார்க்க  வைத்திருந்த ஸ்டெதெஸ்கோப், ஆங்கில மருந்துகள் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த  ஏராளமான பொதுமக்கள் இவரிடம் மருத்துவம் பார்த்ததாக  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழறிஞர்கள் உதவித்தொகை  பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, டிச.20 - அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அன்னைத்  தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த  தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்  செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் உதவித் தொகை ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 என நான்காயி ரம் ரூபாய் வழங்கப்படுகிறது.  அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலு கையும் வழங்கப்படுகிறது. அவர்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள்  முழுவதும் ரூ.2500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 வழங்கப்படுகிறது.  2023-2024 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. 01.01.2023 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய மைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவ தற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிட மிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.   நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவல கத்தில் 31.12.2023-க்குள் அளிக்க வேண்டும். நேரடியாக  சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரி விக்கப்பட்டுள்ளது.

செந்துறையில் வேளாண்மை  இணை இயக்குநர் ஆய்வு

அரியலூர், டிச.20 - அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில் 1500 ஹெக்டேரில் நெல், 4134 ஹெக்டேரில் உளுந்து, 1368 ஹெக்டேரில் பருத்தி ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. ஒன்றிய-மாநில திட்டங்கள் வாரியாக 36 மாதிரி செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.  செயல் விளக்கத் திடல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாலையா மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், பயிர் வாரியாக பூச்சி நோய்த் தாக்குத லின் அறிகுறிகளை கண்காணித்து உரிய தொழில்நுட்ப அறிவுரைகளை தக்க நேரத்தில் வழங்கிட வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் செந்துறை வட்டார முன்னோடி விவசாயிகளிடம் கலந்து ரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.

மின்சாரம் தாக்கி எருமை மாடுகள் பலி 

இராஜபாளையம், டிச.20- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்  தூர் காமராஜர் நகர் பகுதியில் தனிக்கொடி என்பவர் 10  எருமை மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வரு கிறார். இந்நிலையில், செவ்வாயன்று காமராஜர் நகர் பகுதி யில் இருந்து இந்திரா நகர் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றுக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை அழைத்துச் சென்றார். அப்போது அங்கு மின்கம்பத்தை தாங்கும் கம்பி யில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 3 எருமை மாடுகள்  மின்சாரம் தாக்கி பலியானது.

கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு  டிச.24-இல் எழுத்துத் தேர்வு

அரியலூர், டிச.20 - அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24 அன்று நடைபெறுகிறது என அரியலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத் தலைவரும், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளருமான தீபா சங்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்  கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில் காலி யாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, அரியலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் டிச.24 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 வரை நடை பெற உள்ளது.  தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்வு எழுது வதற்கான நுழைவுச் சீட்டு இணையதள முகவரியில் வெளி யிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப  எண், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என  தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.20 - சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட துறை களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதியம் வழங்க  வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளை சார்பில் ஓய்வூதியர் தின விழா புதுக் கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.வெள் ளைச்சாமி, பொருளாளர் கி.ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள் கருத்துரை ஆற்றினர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் என். ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர்  பி.மணிவண்ணன் வரவேற்க, மா.வேலா யுதம் நன்றி கூறினார். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு  10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு  பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850  ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.