districts

நெல் தரிசில் விதைப்பு: விழிப்புணர்வு பேரணி

 பொன்னமராவதி, ஜன. 25 - பொன்னமராவதி அருகே ஆலவயலில் தேசிய நீடித்த  வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டை விவசா யிகள் பயிற்சி நடைபெற்றது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்  கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலவயல் ஊராட்சியில் இப்பயிற்சி  நடைபெற்றது. இதில் வேளாண்மை இயக்குனர் சிவராணி பேசுகை யில், மண் பரிசோதனை செய்து மண்வள அட்டையில் பரிந்து ரைக்கப்பட்ட உர அளவே பயன்படுத்த வேண்டும். பசுந்தாள்  உரம், பசுந்தழை உரம், தொழு உரம் மற்றும் உயிர் உரங்கள்  பயன்படுத்தி வேதியியல் உரத்தை சிக்கனமாக உபயோ கிக்க வேண்டும். வரப்பில் பயறு வகை பயிர்களை விதைத்து  நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரிக்க வேண்டும். பூச்சிக் கொல்லிகளை உபயோகிக்க வேண்டும். நெல் தரிசில் பயறு களை விதைத்து எஞ்சி உள்ள ஈரப்பதத்தை உபயோகப்ப டுத்தி கூடுதல் லாபம் பெறலாம். பயறு வகை பயிர்கள் காற்றில்  உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தி மண்ணில் தழைச்சத்தை அதிகரிக்கும் என்றார்‌.  அதனைத் தொடர்ந்து நெல் தரிசில் பயறு விதைக்க வலி யுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது‌. ஆலவயல்  பேருந்து நிறுத்தத்தில் தொடங்கிய பேரணி ஊராட்சி மன்ற அலு வலகம் வரை நடைபெற்றது.