தேனி, ஜூன் 1-
உலக பாதுகாப்பு நாளை முன்னிட்டு தென் கொரிய நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட ஆண்டிபட்டி -ஜக்கம் பட்டியை சேர்ந்த மாணவி ஸ்ரீனிகா முதல் பரிசை வென்றுள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா டெக்ஸ் உரிமையாளர் எஸ்.பழனிச் சாமி. இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஆவார். இவரது மகன் ப.கார்த்திக் -ரம்யா தம்பதியரின் மகள் ஸ்ரீனிகா. இவர் தேனியில் உள்ள மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
தென் கொரிய நிறுவனம் உலக பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தது .அதில் கலந்து கொண்டு ஓவியம் வரைந்து அனுப்பியிருந்தார். இந்த போட்டியில் மாணவி ஸ்ரீனிகா வரைந்திருந்த ஓவியம் முத லிடத்தை பிடித்தது. தென்கொரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஸ்ரீனிகாவிற்கு முதலிடம் பெற்றதற்கான சான்று மற்றும் முதல் பரிசு ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது.