districts

img

தென்னிந்திய ரோல் பால் போட்டி: தமிழக அணி முதலிடம்

பெரம்பலூர், செப்.30 - தென்னிந்திய அளவிலான ரோல் பால் சாம்யன்ஷிப் போட்டியில் தமிழக அணிகள் முதலிடத்தை பிடித்தன. தென்னிந்திய அளவில் 11 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி பெரம்பலூர் ஆதவ் பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றன. தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், அந்தமான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பிரிவில் 6 அணிகளும், மாணவிகள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொண்டன.  மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் லீக் போட்டிகள் சனிக்கிழமை முடிவடைந்தன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் பிரிவில் தமிழக அணி முதலிடத்தையும், மாணவர்கள் பிரிவில் கேரளா அணி 2 ஆம் இடத்தையும், அந்தமான் அணி 3 ஆம் இடத்தையும் பிடித்தன. இதேபோல் மாணவிகள் பிரிவில் ஆந்திரா அணி 2 ஆம் இடத்தையும், கேரளா அணி 3 ஆம் இடத்தையும் பிடித்தன. இந்த போட்டியில் முதலிடத்தை பிடித்த அணிகள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் ரோல்பால் சங்க மாநில தலைவர் சுப்ரமணி, செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.