districts

img

சூரிய சக்தி மூலம் இயங்கும்  நெல் குத்தல் அரிசி இயந்திரம்

 மயிலாடுதுறை, மார்ச் 6-  மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரியஒளி மூலம் இயங்கக்கூடிய கைக்குத்தல் முறை யில் நெல் உரிக்கும்  இயந்திரம் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மறையூர் சாலை சித்தர்காட்டில் உள்ள பீஸ் பவுன்டே சன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை, சென்னை வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியா ளர் இரா.முருகேசன் தொடக்கி வைத்தார். வேளாண்மை உற்பத்தி  நிறுவனங்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பார்வையிட்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, வேளாண்மைபொறியியல் துறை செயற்பொறியாளர் எம்.பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் ஆர். ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் குமணன், சேகர், ராஜாராம், சத்யபிரியா,  செந்தில், பீஸ் பவுண்டேசன் நிறுவனர் செல்வம் ஆகியோர் செய்தி ருந்தனர்.