பெரம்பலூர், மே 25-
2023-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது பெற, பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருது கள் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப் பிடமாகவும், 18 வயது மேற்பட்டவரகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மென்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவ னமாகவும் இருத்தல் வேண்டும். எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (https://awards.tn.gov.in) 10.06.2023 மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவல கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவரத் தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.