மதுரை, ஜூன் 13-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பும் பாஜக மாநிலச் செயலா ளர் எஸ்.ஜி.சூர்யா மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப் பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா, பகுதிக்குழுச் செயலாளர் ஏ. பாலு ஆகியோர் மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- “பாரதீய ஜனதா கட்சியின் மாநிலச் செய லாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கவுன்சில ரால்-தூய்மைப் பணியாளரின் உயிர் பறி போனது என்றும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்” என்ற பொய்ச் செய்தி யை தனது டுவிட்டர் மற்றும் சமூக வலை தளங்களில் பதிவிட்டுப் பரப்பி வருகிறார்.
இந்தச் செய்தியை நானும் எங்களது கட்சி தோழர்கள் பலரும் ஜூன் 10-ஆம் தேதி பார்தோம். அந்தச் செய்தியில், “மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-ஆவது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரைக் கட்டாயப் படுத்தி வேலை செய்யச் சொல்லியுள்ளார். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்து விட்டதாகவும். சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தைச் சார்ந்தவர் எனவும் பதி விட்டுள்ளார்.
மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூ ராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்த வொரு சம்பவமும் நடைபெறாத போது சமூக பதற்றத்தை ஏற்படுத்தி சாதி மோதலை தூண்டும் விதமாக உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். எஸ்.ஜி.சூர்யா. இப்படி தவறான செய்திகளைப் பரப்புவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மீதும் அவதூறுகளைப் பரப்பி வரும் சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண் டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.