மயிலாடுதுறை, ஜூலை 23 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 22 ஆம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. ஆலயத்திலிருந்து கொடி ஊர்வலம் புறப் பட்டது. ஊர்வலத்தில் சந்தனகுடம், குதிரை வண்டியில் கொடி ஊர்வலம், அதனை தொடர்ந்து மிக்கேல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு செயின்ட் ஜார்ஜ், புனித சந்தியாகப்பர் ஆகிய சொரூபங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு, நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், கேரளா செண்டை மேளம் முழங்க நாட்டிய குதிரைகளுடன் ஊர்வலம் புறப்பட்டது. ராஜம்பாள் தெரு, மெய்தீன் மரைக்காயர் தெரு, வேப்பமரத்தெரு, நாடார் காளியம்மன் கோவில் தெரு, பார்வதி அம்மன் கோவில் தெருக் கள் வழியாக ஊர்வலம் சென்று ஆலயத்தை அடைந்தது. ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களி லிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.