தென்காசி, நவ. 14 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கமும் இணைந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் பட்டியல் இன மக்களுக் கான கோரிக்கை சாசன கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில விவசாய தொழிலா ளர் சங்க மாவட்டத் தலை வர் எம்.எஸ். கிட்டப்பா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பால்ராஜ் தலை மை தாங்கினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் முருகன், தென் காசி மாவட்ட குழு செயலா ளர் வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சீனி பாண்டி யன், பாலு, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட குழு செயலாளர் முத்துப்பாண்டியன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். ஏ ஐ டி.யூ.சி மாவட்ட பொறுப்பாளர் சுப் பையா ,தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாரியப்பன், விவ சாயிகள் சங்க மாவட்ட செய லாளர் கணபதி, மாவட்ட நிர்வாகி வேலுமயில், பீடி சங்க மாவட்ட பொதுச்செய லாளர் மகாவிஷ்ணு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.