சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு
அரியலூர், பிப்.13- அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், தளவாய், விளாங்குடி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் சாலை பாது காப்பு மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சா ரங்களை மேற்கொண்டனர். மேலும் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணி வதன் அவசியம், மதுயில்லா பயணம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, விழிப்பு ணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சி
அரியலூர், பிப்.13- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் 4,5 ஆம் வகுப்பு கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு இணைப் புப் பாடப் பயிற்சி என்ற தலைப்பில் ஒருநாள் குறுவள மையப் பயிற்சி ஆண்டிமடம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் துவக்கி வைத்து இணைப்புப் பாடப் பயிற்சி பற்றிய கருத்துக்கள், மாணவர்களின் கற்றல் அடைவு நிலை, கற்பித்தல் உத்திகள், மாணவர்களை உற்சா கப்படுத்துதல், கேள்விகள் தயாரித்தல் போன்ற கருத்துக் களை பகிர்ந்து கொண்டார். இதேபோல் ஆண்டிமடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி யில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத் திற்கு உட்பட்ட கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று குறுவள மையங்களில் இணைப்புப் பாடப் நூல் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூர், பிப்.13- அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 316 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற ஆட்சியர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம் பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 61 நபர்களுக்கு ரூ.5,93,784 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலு வலர் ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தூய்மைப் பணியில் சுயஉதவிக்குழு முறையை அமல்படுத்த வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி, பிப்.13- திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநக ராட்சி ஆணையர் வைத்தியநாதன் தலை மையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில், ‘‘திருச்சி மாநகராட்சி தூய்மை பணியில் சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் 1700க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அரசாணை 152ஐ வலியுறுத்தி மாநகராட்சி தூய்மை பணி யை ஒப்பந்தம் விடுவதற்கு மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுப்பதால், தொழிலாளர்கள் அடிப் படை உரிமைகளை இழக்க நேரிடும். தற் சமயம் ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.575ஐ சுயஉதவிக்குழு தூய்மைப் பணி யாளர்கள் பெற்று வருகின்றனர். பிஎப் பணம் பிடிக்கப்பட்டு சரியாக அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படு கிறது. தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுத்தால் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்தபட்ச கூலியை கொடுப்பதில்லை, மேலும் பிஎப் பணம் கட்டுவதில்லை. எனவே தற்சமயம் செயல்பட்டு வரும் சுயஉத விக்குழு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10-இல் இலவச வீட்டுமனை கோரி சாலை மறியல்
திருச்சிராப்பள்ளி, பிப்.13- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் திங்க ளன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். மனுவில், ‘‘திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் வருவாய் கிரா மத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் 59 விவசாயத் தொழிலாளர்கள் கடந்த 12 ஆண்டுகாலமாக இலவச வீட்டுமனை கேட்டு தொடர்ந்து பலமுறை மனு கொடுத் தும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் விசாரணை முடிந்து வட்டாட்சி யரிடம் கோப்புகள் நின்றுவிட்டது. பின்னர் பல போராட்டங்கள் நடத்திய பின் அமைதிபேச்சுவார்த்தை ஒப்பந்தப்படி சார் ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பப்பட் டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஒன்றரை ஆண்டுகாலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் 1.8.2022அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் 59 விவசாயிகளும் மண்டல துணை வட்டாட்சியர்(ஸ்ரீரங்கம்) மனு கொடுத்து விளக்கம் கேட்க முயற்சித்த போது மனுவை வாங்காமல் இடம் எங்கே இருக்கிறது என விவசாயிகளிடமே கேள்வி கேட்டு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட செயலை கண்டித்து மார்ச் 10ஆம் தேதி திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை யில் முத்தரசநல்லூர் பகுதியில் ராமநாத புரம் கூட்டு குடிநீர் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்வில், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
‘‘வாரச் சந்தையாக மாறும் குப்பைமேடு’’
மயிலாடுதுறை, பிப்.13- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆணைக் காரன் சத்திரம் ஊராட்சி மற்றும் கோபாலசமுத்திரம் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 20-க்கும் மேற் பட்ட கிராமங்களில் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள், கொள்ளிடம் ரயில் பாலம் அருகே கொட்டப் பட்டு வந்தன. இந்நிலையில், 15 வருடங்களுக்கும் மேலாக குப்பை மேடாக இருந்த இப்பகுதியில் வாரச்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பகுதி யில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், ஒன்றி யக்குழு உறுப்பினர் வாசு, துணைத் தலைவர் சிவப்பிர காசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
‘‘குப்பையாக மாறிய குப்பை வாகனங்கள்’’
மயிலாடுதுறை, பிப்.13- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பல ஊராட்சிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்துச் செல்வதற்கு டீசல் எஞ்சினில் இயங்கும் 3 சக்கர வாக னங்கள் வழங்கப்பட்டன. இந்த வாகனங்கள் வழங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே நன்கு இயங்கின. பின்னர் ஒவ்வொரு வாகன மும் பழுதாகி நிறுத்தப்பட்டது. பழுதடைந்து நின்ற குப்பை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஊராட்சிகள் சார்பில் அதிகாரிகள் மேலும் பழுதை சரி செய்து இயக்க முடிவு செய்தனர். ஆனால் இந்த வாகனங்களுக்கு உரிய உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் வாகனங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை விரைவில் எடுத்துச் செல்ல இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், செயல்படாமல் போனதால் ஊராட்சி களில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் விரைவில் எடுத்துச் சென்று சேர்ப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த வாகனங்களை மீண்டும் இயக்கும் வகையில் உரிய உதிரி பாகங்கள் கிடைக்கச் செய்ய வும், மீண்டும் வாகனங்களை இயக்கும் வகையிலும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ரஷ்யப் பெண்ணை மணந்த தமிழ் இளைஞர்
தஞ்சாவூர், பிப்.13- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன் - கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன் பிரபாகரன் (33). இவர் ரஷ்யாவில் யோகா ஆசிரியராக, கடந்த 10 ஆண்டுகளாக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி - மயூரா தம்பதியின் மகள் அல்பினா (31) என்பவரை காதலித்து வந்தார். இது பற்றி மணமகள் வீட்டாரிடமும், தனது பெற்றோரிடம் கூறி, அல்பினாவை திருமணம் செய்து கொள்ள பிரபாகரன் சம்மதம் பெற்றார். இதையடுத்து மதுக்கூரில் பிரபாகரன், ஓதுவார்கள் முன்னிலையில், அல்பினாவுக்கு தாலி கட்டி, தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
புதுக்கோட்டை, பிப்.13- புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த வர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துடை யான்பட்டியை சேர்ந்த ரமேஷ்(45). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் 12-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்று ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிலர் கல்வித்துறை அதி காரிகளிடம் புகார் கொடுத்தனர். இந்த நிலையில், 3 நாட்களாக கல்வித்துறை, வரு வாய்த்துறை, காவல்துறை, சமூக பாது காப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புகாரில் சிக்கி யுள்ள ஆசிரியர் ஆகியோரிடம் தனித்தனி யாக விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூக அலுவலர் கோகுலப்பிரியா ஒரு புகார் மனு அளித் தார். அதில், அந்த மாணவிகளை உதவி தலைமையாசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதனை வெளியில் சொன் னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இதனடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதவி தலைமையாசிரியர் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்றோர்கள் முற்றுகை இந்நிலையில், திங்கள்கிழமை பெற் றோர்கள், பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளி துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து உள்ளிட்டோர் பெற்றோர்கள், பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள் பொதுமக்கள், பெற்றோர் களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது அனைத்து ஆசிரியர்களை யும் பணி மாற்றும் செய்ய வேண்டும். செய் முறை தேர்வு மதிப்பெண்களை தலைமை ஆசிரியரே வழங்க வேண்டும். மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை கூட்ட வேண்டும். பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். பள்ளி முழுவதிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதுகுறித்து உயர் அதி காரிகளிடம் கலந்தாலோசித்து நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறி னர். இதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.