districts

img

குறுவட்ட தடகளப் போட்டிகளில் சர்மிளா காடஸ் பள்ளி முதலிடம்

மயிலாடுதுறை, ஆக.31 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி குறுவட்டத்திலுள்ள பள்ளி களுக்கிடையே பள்ளி கல்வித்துறை யால் குறுவட்ட தடகள விளை யாட்டுப் போட்டிகள் காட்டுச்சேரி அரசு விளையாட்டரங்கில் அண்மை யில் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளி லிருந்து சுமார் 900 தடகள வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த போட்டிகளில் 82 புள்ளிகள் பெற்று பொறையார் சர்மிளா காடஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும் 19 வயதுக்கு கீழுள்ளோர் பிரிவில் இரண்டு சாம்பியன் பட்டங் களையும் இப்பள்ளி கைப்பற்றி யுள்ளது.  அரசன், தமிழரசன், லின்சி ரீனா,  ஸ்ரீகாயத்ரி, ராஜவள்ளி, துர்கா தேவி. கங்காவர்ஷினி ஆகியோர் முறையே உயரம் தாண்டுதல், மும் முறை தாண்டுதல், 400மீ நீளம் தாண்டுதல், 200 மீ மற்றும் 800 மீ  ஓட்டப் பந்தயப் போட்டிகளில் முதலி டமும், ஜேஷ்னி, நிகேஷ் கங்கா வர்ஷினி, பிரித்தா, ஸ்ரீ காயத்ரி, முகமது அல் அஸ்ஃபர், லின்சி ரீனா,  ஜூலியா, மெகாஸ்ரீதர்ஷன் ஆகி யோர் முறையே 200 மீ நீளம் தாண்டு தல், உயரம் தாண்டுதல், 100 மீ  குண்டு எறிதல், 600 மீ ஓட்டம்  ஆகியப் போட்டிகளில் இரண்டா மிடமும் பெற்றனர்.  மேலும், காருண்யா, துர்கா தேவி, சரண்குமார், தமிழரசன், மணி கண்டன் ஆகியோர் முறையே குண்டு  எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் 400மீ ஓட்டம் ஆகியப் போட்டிகளில் மூன்றாமிடமும் பெற்ற னர்.  குழுப் போட்டிகளில் இப்பள்ளி யின் மாணவ-மாணவிகள் 4x100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்களில் 3  இரண்டாம் பரிசுகளையும், 2 மூன்றாம் பரிசையும், 4x400 தொடர்  ஓட்டத்தில் 2 ஆவது பரிசும் வென்ற னர். இப்பள்ளியின் லின்சி ரீனா 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாம்பியனாகவும், ஸ்ரீ காயத்ரி  2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று மற்றொரு சாம்பியனாகவும் அறிவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா  எம். முருகன் பதக்கங்களை வழங்கி னார். வெற்றி பெற்ற தடகள வீரர்களை பள்ளியின் முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரி யைகள் ஹெலன் ஃபெலிசிட்டா மற்றும் முத்துப்பிரியா வாழ்த்தி பரிசு களை வழங்கினர்.