districts

திருச்சி முக்கிய செய்திகள்

விபத்தில் பெண் பலி

அறந்தாங்கி, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி, களக்குடி அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தேங்காய் வியா பாரம் செய்து வருகிறார். இவரது மனைவி  ஜெய லட்சுமி (40).  இவர்கள் இருவரும் வெள்ளியன்று இரு சக்கர  வாகனத்தில் அறந்தாங்கி பெரிய கடைவீதியில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, எதிரே காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப்  பேருந்தை செம்பட்டி விடு தியை சேர்ந்த மூக்கையா  (39) என்பவர் ஓட்டிவந்து உள்ளார். அப்போது பேருந்தின் ஓரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயலெட்சுமி நிலை  தடுமாறி கீழே விழுந்த தில், பேருந்தின் பின்பக்க டயர் ஏறி-இறங்கியதில் ஜெயலெட்சுமி சம்பவ  இடத்திலேயே உயிரி ழந்தார். சம்பவ இடத் திற்கு வந்த போலீசார் சட லத்தை மீட்டு அறந்தாங்கி  அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மாணவர் நாட்குறிப்பு  வழங்கல்

அறந்தாங்கி, ஜூலை 13 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  ஒன்றியம் ஆவணத் தான்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப் பள்ளி யில் மாணவர் நாட்குறிப்பு  வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் 200 மாணவர்களுக்கு, மாணவர் நாட்குறிப் பினை அறந்தாங்கி களப் பக்காட்டை சேர்ந்த ராஜேந்திரன், ஜீவகன், சுபாஷினி ஆகியோர் வழங்கினர். இதில் நல்லாசிரியர் ஸ்ரீ.பாஸ் கரன் மற்றும் ஆசிரியர் கள் கலந்து கொண்டனர்.

இலவச காது, கண் பரிசோதனை முகாம்

பாபநாசம்,  ஜூலை 13 - பாபநாசம் ரோட்டரி கிளப், தஞ்சாவூர் அகர்வால் கண் மருத்து வமனை, தஞ்சாவூர் ஹியர் சாப் இணைந்து இலவச காது மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தின.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறையில் நடந்த முகாமை கும்பகோணம் கோட்ட கலால் அலுவலர் அருள்மணி துவக்கி வைத்தார். இதில் ஆப்தோ மெட்ரிஸ்ட் ஷிபா 60 பேருக்கு கண்  பரிசோதனை மேற் கொண்டார். இதில் 12 பேருக்கு கண்ணில் புரை  இருப்பது கண்டறியப் பட்டு, அறுவைச் சிகிச் சைக்கு பரிந்துரைக்கப் பட்டது. 18 பேருக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டது.  இதில் பாபநாசம் ரோட் டரி கிளப் தலைவர் சக்திவேல், செயலர் ரவிச்சந்திரன், பொருளா ளர் ராமநாதன், உதவி ஆளுநர் அறிவழகன், முன்னாள் உதவி ஆளு நர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.  இதேபோன்று தஞ்சா வூர் ஹியர் சாப் சார்பில்  ஆடியாலஜிஸ்ட் சூசன்  21 பேருக்கு காதில் பரி சோதனை மேற்கொண்ட தில், 9 பேருக்கு பாதிப்பு  இருப்பது கண்டறியப் பட்டது.

தாம்பரத்தில் பொறியியல் பணி: ரயில்களின் சேவை மாற்றி அமைப்பு

பாபநாசம், ஜூலை 13- தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்லும், பல்வேறு ரயில்களின் சேவை மாற்றி அமைக்கப்படுகிறது. சென்னை செல்பவர்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் - நாகர்கோவில் அந்தோதியா ரயில் (எண்.20692) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 23 நாட்களுக்கு இந்த ரயில் சேவை கிடையாது. ஆகஸ்ட் 15, 16 ,17 ஆகிய தேதிகளில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (எண்கள்.22675, 22676) செங்கல்பட்டு வரை மட்டுமே இயங்கும். ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் - சென்னை ரயில் (எண்.20606) விழுப்புரம் வரை மட்டுமே செல்லும். ரயில் எண்.20606, ஆகஸ்ட் 17 அன்று செங்கல்பட்டு-காஞ்சிபுரம் அரக்கோணம் வழியாக எழும்பூர் செல்லும்.  திருச்சியில் இருந்து அகமதாபாத் வரை செல்லும் வாராந்திர விரைவு வண்டி (எண்.09419, 09420) ஜூலை 28, ஆக.4, 11, 18 இந்த நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த வண்டி சென்னை வழியாக செல்லாமல், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே சென்னை செல்லும் பயணிகள் தங்கள் பயணங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் உடல் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, ஜூலை 13 - புதுக்கோட்டை தைலமரக் காட்டில்  போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட திருச்சி ரவுடி துரையின் சடலம், உடற் கூராய்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அவரது உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை வம்பன் அருகே  உள்ள தைலமரக்காட்டில், திருச்சியைச்  சேர்ந்த ரவுடி துரை என்ற துரை சாமி (42) வியாழக்கிழமை மாலை  என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் சவக்கிடங்கில் வைக்கப் பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலை  திருச்சியிலிருந்து அவரது உறவி னர்கள் ஏராளமானோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.  துரை கொல்லப்பட்டதைக் கண்டித்து  அவர்கள் மருத்துவமனை வளாகத் துக்கு வெளியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், அவர்கள்  கலைந்து சவக்கிடங்கு அருகே கூடினர். ஆர்டிஓ விசாரணை பிற்பகல் 3 மணிக்கு வருவாய்க் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா சவக் கிடங்குக்கு வந்தார். சடலத்தைப் பார்வையிட்ட அவர், துரையின் தாய்  மல்லிகாவை அழைத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, உடற்கூராய்வு நடைபெற்றது. எக்ஸ்ரே கருவி எடுத்து  வரப்பட்டு, குண்டு துளைத்த பகுதிகள்  எக்ஸ்ரே எடுக்கப்பட்டன. சுமார் ஒரு  மணி நேரம் நடைபெற்ற உடற்கூராய்வுக் குப் பிறகு மாலை 5 மணிக்கு துரையின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  சடலம் ஒப்படைக்கப்படும் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் தடுக்க ஏராளமான போலீ சார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த னர். அப்பட்டமான கொலை: வழக்குரைஞர் பேட்டி புதுக்கோட்டையில் ரவுடி திருச்சி துரை என்கவுண்டர் சம்பவம் அப்பட்ட மான கொலை; சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோருவோம் என்றார் துரை யின் வழக்குரைஞர் பிரபாகரன். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக் கிழமை அவர் அளித்த பேட்டியில், கோவை காவல் உதவி ஆணையர் அலு வலகத்துக்கு நிபந்தனை ஜாமீன் கை யொப்பமிட தனது சகோதரி மகன் வெள்ளைச்சாமியுடன் சென்றார் துரை. வழியில் நம்பர் பிளேட் இல்லாத 3 வாகனங்களில் சீருடை அணியாத போலீசார் அவரைப் பிடித்து, புதுக்கோட் டைக்கு அழைத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளனர். வழக்குகளை முடித்து திருந்தி வாழ முற்பட்ட துரையை, காவல்துறை சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்துள்ளனர். சட்டப்படி நீதித்துறை நடுவர் விசா ரணை நடத்த வேண்டும். ஆனால்  காவல்துறைக்கு உறுதுணையாக இருக்கும் நிர்வாக நடுவரை வைத்து  விசாரணை நடத்துகின்றனர். ஏற்கெ னவே மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்த கொலை  வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க  வேண்டும் என நீதிமன்றத்தில் முறை யிடுவோம்” என்றார்.

அதிக வட்டி தருவதாக மோசடி  டிராவல்ஸ் உரிமையாளருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சாவூர், ஜூலை 13-  அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளரிடம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அஹமத் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தவர் முஸ்தபா. இவர்  தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி யுடன் வருவாய் ஈட்டலாம் என விளம்பரம் செய்தார். இதைப்  பார்த்து திருச்சியைச் சேர்ந்த சபியுல்லா 2021 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தார். ஆனால், இதற்கு வட்டி, அசல் தராமல் முஸ்தபா ஏமாற்றினார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் சபியுல்லா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை நீதி பதி நாகப்பன் விசாரித்து முஸ்தபாவுக்கு 6 ஆண்டுகள் சிறை  தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அஹமத் டிராவல்சில் முஸ்தபா கூறிய அதிக  வட்டி ஈட்டலாம் என்ற விளம்பரத்தை பார்த்து 400-க்கும் அதிக மானோர் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்ததன் அடிப்படை யில், மாவட்டக் குற்றப் பிரிவில் 2022 ஆம் ஆண்டில் வழக்குப்  பதிவு செய்யப்பட்டு, அது விசாரணையில் உள்ளது.

பாபநாசம் விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூலை 13 - தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (வேளாண் வணிகம்) வித்யா தலைமையில், விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னிலையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.  ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து மொத்தம் 1926 விவசாயிகள் 269 மெ.டன்  பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், செம்பனார்கோ வில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, தெலுங்கானா, மகுடஞ்சாவடி, தேனி, விருதுநகர், கொங்கணாபுரம் உள்ளிட்ட  பகுதிகளை சார்ந்த 11 வணிகர்கள் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு ரூ.1.79 கோடி. இதில் அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7119, குறைந்தபட்சம் ரூ.6303, சராசரி ரூ.6659 என தனியார் வணிகர்கள் விலை நிர்ணயம் செய்தனர். இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் கூறுகையில், “பருத்தி  எடுப்பு கூலி உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டுப் பார்த்தால்  குவிண்டாலுக்கு ரூ.9,000 விலை நிர்ணயம் செய்தால்தான் கட்டுப்படியாகும்” என்றார்.