districts

திருச்சி மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் தொடர் திருட்டு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 10- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்தில் துணை ஆட்சியர் சீனிவாசனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி செய லாளர் ரபீக் அகமது தலைமையில், மருந்து விற்பனை  பிரதிநிதிகள் மனு கொடுத்தனர்.  அந்த மனுவில், “நாங்கள் மருந்து விற்பனை பிரதி நிதியாக பணியாற்றுகிறோம். எங்கள் பணிக்கு இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறோம். கடந்த மே 20 முதல் 31 ஆம் தேதிக்குள் உறையூர், தில்லை நகர், கண்டோன்மென்ட், நம்பர் 1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் எங்கள் பிரதிநிதிகளின் இருசக்கர வாகனங்கள் திருடு போய்விட்டன. இதுகுறித்து புகார்  மற்றும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கொடுக்கப் பட்டன. ஆனால் இதுவரை எங்களது வாகனங்களை கண்டுபிடிக்கவில்லை. எனவே தாங்கள் இதில் தலையிட்டு மாநகரப் பகுதிகளில் இரு சக்கர வாக னங்கள் தொடர்ந்து திருடு போவதை தடுக்கவும், திருடப்பட்ட வாகனங்களை மீட்டுக் கொடுக்கவும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்த னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அகமது செய்தியாளர் களிடம் கூறுகையில், “திருச்சி மாநகரப் பகுதியில் கடந்த  11 நாட்களில் 6 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளன. இது பொதுமக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம்  பொது இடங்கள், அரசு மருத்துவமனை போன்ற இடங்க ளில் கண்காணிப்பு கேமரா அமைத்து, அதனை பரா மரித்து இருசக்கர வாகன திருட்டை தடுக்க வேண்டும்” என்றார்.