districts

img

அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரிடம் மனு

மயிலாடுதுறை, ஆக.16 -

      தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமாரிடம் மனு  அளிக்கும் இயக்கம் புதனன்று நடைபெற்றது.  

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் த.ராயர் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் ஆகி யோர் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை  மனுக்களை அளித்தனர். சங்க மாவட்டப் பொருளாளர் அ.இராமலிங்கம் (இயற்கை விவசாயி), மாவட்டத் துணைச் செயலாளர் சி.மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சட்ட ரீதியாக பல தலைமுறைகளாக அடி மனைகளில் வீடுகள், சிறுகடைகள் கட்டி  பயன்படுத்தி வருபவர்களை “ஆக்கிரமிப்பா ளர்கள்” என்ற பெயரில் வெளியேற்றும் நடவ டிக்கைகளை கைவிட வேண்டும். காலம்  காலமாக கோயில் நிலங்களில் குத்தகை  சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை “மறு  ஏலம்” என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளி யேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.