districts

img

மூத்த தோழர் பவானி காலமானார்

குடவாசல், ஜன. 29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியம் அடவங்குடி முன் னாள் கிளைச் செயலாளர் மூத்த தோழர் பவானி (74) வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு கால மானார். தோழர் பவானி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அடவங்குடி கிளை செயலாள ராகவும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பல் வேறு வெகுஜன அரங்க பொறுப்புகளிலும், மக்களுக் கான போராட்டங்களிலும் பங்கேற்றவர். தோழரின் மறைவு செய்தி அறிந்த மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் எம்.சேகர்,  மாவட்ட குழு உறுப்பினர் கே. சீனிவாசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.தம்புசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி. ஜெயபால் ஆகியோர் அட வங்குடியில் உள்ள அன்னா ரது இல்லத்திற்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி னர். மேலும் அரசவனங்காடு ஊராட்சி மன்றத் தலைவர்  எல்.சுலோச்சனா மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பினர் கள், கிளை செயலாளர், வெகுஜன அரங்க தோழர் கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி  செலுத்தினர். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.