மயிலாடுதுறை, அக்.19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய 12 ஆவது மாநாடு சனிக்கிழமை ஆக்கூரில் நடைபெற்றது. தலைமைகுழு தேர்வுக்குப் பின் மாநாட்டு கொடியை மூத்த தோழர் ஆர்.சிவராஜ் ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.துரைராஜ் உரை யாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன் உரையாற்றினார். நான்கு வழிச்சாலையால் நிலங்களையும், வீடுகளை யும் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும். குளம், குட்டை களை தூர்வாருவதாக கூறி மணல் கொள்ளையில் ஈடுபடு வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய் யப்பட்டு, புதிய செயலாள ராக கே.பி.மார்க்ஸ் தேர்ந்தெ டுக்கப்பட்டார். மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் நிறை வுரையாற்றினார். முன்னதாக அக்.21 அன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் திறந்து வைக்க வுள்ள மயிலாடுதுறை மாவட்டக் குழு புதிய அலுவலக கட்டுமான பணிக்காக செம்பனார்கோவில் ஒன்றிய மாநாடு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் நிதி, மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசனிடம் வழங்கப் பட்டது.