தஞ்சாவூர், ஜூன் 22-
தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில், தஞ்சாவூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வசதியற்றவர்களுக்கான குற்றவியல் வழக்குகளை நடத்த குற்றவியல் வழக்கு ரைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. சுந்தரராஜன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.மலர்விழி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.வடிவேல், சார்பு நீதிபதி யும், மையச் செயலாளருமான எஸ்.இந்திரா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.