திருச்சிராப்பள்ளி, ஆக.2 -
மலேசியாவில் இருந்து இரு பயணிகள் கடத்தி வந்த ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறி முதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் இரு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் இருவரையும் தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசா ரணையில் இருவரும் உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை மூலம் தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. இருவரும் 1188 கிராம் தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்திருந்தனர். அவற்றின் மதிப்பு ரூ.71.72 லட்சம். இது தொடர்பாக சுங்கத் துறையினர் வழக்குப் பதிந்து இருவரையும் புதனன்று கைது செய்தனர்.