திருச்சிராப்பள்ளி, பிப்.12 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சலவைத் தொழிலாளி ஜானகி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி மாவட்டம் திருவானைக் காவல் அழகிரிபுரத்தில் நான் குடும்பத் துடன் வசித்து கொண்டு பழைய துணி களை சலவை செய்யும் தொழில் செய்து வருகிறேன். இந்நிலையில் எங்கள் பகுதியில் வசிக்கும் லதா நாராயணன் என்பவர் சலவை தொழிலாளர் சங்க இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வருகிறார். கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவு அவர்களுடைய அடாவடி செயலை கண்டித்து அரசு நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட கோரி 24.1.2024 அன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சி யர் அலுவலகம் எதிரில் சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அதில் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் லதா நாராய ணன் வீடு கட்டி வரும் இடத்தை பார்வை யிட்டு, வட்டாட்சியர் உத்தரவு வரும் வரை கட்டுமானப் பணி செய்வதை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். தாக்க முயற்சி அன்று இரவு லதா நாராயணன் மற்றும் அவரது மகன் கோபால், மோச்சான் மனைவி சுமதி மற்றும் அவரது மகன் சர வணன், பட்டாணி ராஜேந்திரன் மனைவி மேரி ஆகியோர், எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சித் தனர். உடனே காவல் அவசர உதவி எண்.100-க்கு போன் செய்தோம். போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து லதா நாராயணனை அழைத்து எச்சரித்து சென்றனர். ஆயினும் மறுநாள் 25.1.2024 காலை 10 மணிக்கு மீண்டும் லதா நாராயணன் பிரச்சனைக்குரிய இடத்தில் கட்டுமா னப் பணியை துவக்கினார். மீண்டும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே போலீசார், வருவாய்த்துறை அதிகாரி கள் நேரில் வந்து கட்டுமானப் பணி செய்வதை தடுத்து நிறுத்தி, வட்டாட்சி யர் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணியை தொடரக் கூடாது என லதா நாராயணனை எச்சரித்தனர். மேலும், மாலை வரை போலீசார் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். கொலை மிரட்டல் அவர்கள் சென்றவுடன் லதா நாரா யணன் மகன் கோபால், மோச்சான் மகன் சரவணன் உருட்டுகட்டை, பெட் ரோல் கேனுடன் தெருவில் சலம்பிக் கொண்டு, ஊர் பொதுமக்கள் கொடுத்த சலவை துணிகளை எல்லாம் கொளுத்தி விடுவேன் எனக் கூறி மிரட்டிச் சென்ற னர். அப்போது லதா நாராயணன், “எனக்கு எதிராக யார், யார் வேலை செய் கிறார்கள் என எனக்கு தெரியும். அவர்களை கூலி படை கும்பலை ஏவி கொலை செய்வேன்” என மிரட்டுகிறார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டாட் சியர், லதா நாராயணன் வீடு கட்டும் இடம் ஆவணத்தின்படி சலவை தொழி லாளர் சங்க இடம்தான் என அறிவித்து, லதா நாராயணன் வீடு கட்டும் பணியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் எந்த நேரத்தில், என்ன நடக்கும் என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக் கிறோம். எனவே எங்கள் உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்க முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னையும் எங்கள் சமுதாய மக்களையும் பாதுகாக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித் திருந்தார்.