திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 -
திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள தூய மேரியன்னை ஆலய மண்ட பத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தமிழக ஆயர் பேரவை தலை வர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாளையங் கோட்டை மறைமாவட்டம் ஆயர் அந் தோணிசாமி, திருச்சி மறைமாவட்டம் ஆயர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த பேராயர் ஜார்ஜ் அந்தோ ணிசாமி கூறியதாவது:
இந்தியாவின் வடகிழக்கில் அமைந் துள்ள மிகச்சிறிய மணிப்பூர் மாநிலம் கடந்த இரு மாதங்களாக வன்முறை யால் பற்றி எரிகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள னர். வீடுகள், உடமைகள் எரிக்கப்பட்டுள் ளன. ஏறத்தாழ 300 தேவாலயங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுள்ளன. புனிதப் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. உயிருக்கு அஞ்சி, ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து காடுகளிலும், முகாம் களிலும் ஏறத்தாழ 30,000 மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். பழங்குடி மாணவ ரமைப்பு ஊர்வலம் நடத்திய அன்று வெடித்த வன்முறை, 50 நாட்களை கடந்து இன்றும் தொடர்கிறது. அடிப் படையில் மெய்டெய் இனத்தவர் சமூக, அரசியல் பொருளாதார வலிமை பெற் றுள்ளனர். பழங்குடிகளோ சற்றுப் பின் தங்கியவர்கள். ஆனால் தங்களையும் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க வேண்டு மென மெய்டெய்கள் போராடி வரு கின்றனர்.
இந்நிலையில் மெய்டெய் சமூகத்தி னரைப் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற் கான அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளிக்க வேண்டுமெனக் கடந்த 19.4. 2023 அன்று, மணிப்பூர் உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இம்முடிவு தங்களின் நிலம் மற்றும் உரிமைகளைப் பறிக்குமென பழங்குடி யினர் அஞ்சினர். அதற்காகப் பழங்குடி கள் ஊர்வலம் நடத்தியபோதே கடுமை யாக தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல் லப்பட்டுள்ளனர்.
குறிப்பாகத் தலைநகர் இம்பால் மற்றும் மெய்டெய் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலிருந்து குக்கி இனத் தவர் வேட்டையாடப்பட்டுள்ளனர். மேலும் குக்கி இனத்தவர் அதிகம் வாழும் கிராமங்களிலிருந்தும் மெய் டெய் இனத்தவர் உயிர் தப்பி ஓடியுள்ள னர். இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
தற்காலிக முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்துக் கொண் டிருக்கின்றனர். சிலர் மிசோரம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குறிப்பாகக் கல்வி பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். அன்றாட வாழ்க்கைக் கான உணவு, மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்திற்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
நடந்த கலவரத்தை கண்டித்தும், இந்த பிரச்சனையில் ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியும் ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி, அமைதியாக பேரணி நடத்தப் படும். அதே நாளில் சமூக நல்லிணக்க உறுதிமொழியும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.