districts

img

துறைவாரியாக கண்காணிப்பு குழுக்களை அமைத்திடுக கட்டுமானத் தொழிலாளர்கள் மனு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 19-

     திருச்சியில் துறைவாரி யாக கண்காணிப்பு குழுக்  களை அமைக்க வலி யுறுத்தி திருச்சி மாவட்ட கட்டு மானத் தொழிற்சங்க மாநகர் மாவட்டக் குழு சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.  

    நிகழ்விற்கு சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு திருச்சி மாநாகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், கட்டுமான சங்க நிர்வாகி கள் உலகநாதன், வெங்க டேசன், முருகேசன் ஆகி யோர் பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

   மனுவில், ‘‘கட்டுமான 35, 36, 37 வது வாரிய கூட்ட  பரிந்துரைகளை அம லாக்கிட அரசாணை வழங்  கிட வேண்டும், பெண் களுக்கு 55 வயதில் ஓய்வூதி யம் வழங்க வேண்டும், வாரி யம் ஒப்புக்கொண்டபடி மாதா மாதம் ஓய்வூதியம் ரூ.2000 உயர்த்தி வழங்க  வேண்டும், விபத்து எங்கு நடந்து தொழிலாளி இறந்தா லும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், திருச்சி யில் துறைவாரியாக கண்கா ணிப்பு குழுக்களை அமைக்க  வேண்டும், நலவாரியத்தில் பதிவு புதுப்பித்தல் செய்திட இடைத்தரகர்கள் கையெ ழுத்திட அனுமதிப்பதை கை விட வேண்டும்’’ எனக் கூறப்  பட்டுள்ளது.