வருவாய்த் துறையினரை அச்சுறுத்திய மணல் கடத்தல் லாரி ஓட்டுநர்
பாபநாசம், டிச.4- தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் அருகே ராராமுத்திரை கோட்டை கிராமத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்க, பாபநாசம் வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் கமலி, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வை முடித்துவிட்டு புறப்படும்போது, மணல் ஏற்றி வந்த லாரியில் வந்தவர்கள், மணல் கடத்தல் லாரியை பிடிக்க வருவதாக கருதி, ஜீப்பின் மீது இடிக்கும் வகை யில் வேகமாக வந்தனர். அப்போது ஜீப்பில் இருந்த வருவாய்த் துறையினர் நூலிலையில் உயிர் தப்பினர். பின்னர் அந்த வாகனத்தை பிடிக்க முயன்றபோது சுமார் 5 கிலோ மீட்டர் தூரம், வட்டாட்சியர் வாகனத்தை இடிக்கும் வகையில் அச்சுறுத்தியும், இருசக்கர வாக னத்தின் மூலம் வட்டாட்சியர் வாகனத்தினை முன்னேற விடாமல் இருவர் தடுத்துள்ளனர். பின்னர் அந்த லாரியை போராடி, குளிச்சப்பட்டு என்ற இடத்தில் லாரியை நிறுத்த முயன்ற போது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் வருவாய்த் துறையினர் மணல் லாரியை கைப்பற்றி அம்மாபேட்டை காவல் நிலை யத்தில் ஒப்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குரூப்-2, குரூப்-2A போட்டித் தேர்வுக்கு கரூரில் இலவச பயிற்சி வகுப்பு
கரூர்,டிச.4- கரூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், வெண்ணைமலை வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC ) தேர்வாணை யத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2A (முதன்மைத் தேர்வு) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.11.2024 அன்று முதல் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புக ளில் ஸ்மார்ட்போர்டு (SmartBoard) இலவச வைஃபை வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங் கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள் (Spot test), வாராந்திரத்தேர்வு கள், இணையவழித்தேர்வுகள் (online test), முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியு டன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.அதிகப் படியான தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடத்தப் பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-4, TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில் அதிகபடியான மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் அலு வலர்களை கொண்டு ஊக்கவுரை நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் 9003851307 அல்லது 94990-55912 என்ற தொலை பேசி எண் வாயிலாக பதிவு செய்யுமாறு தெரிவிக்கப் படுகிறது. இவ்வாய்ப்பினை கரூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆண்/பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளு மாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 94990-55912 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.