திருச்சிராப்பள்ளி, ஏப்.12 - திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவினை முன்னிட்டு ஏப்.19 ஆம் தேதி (செவ்வா ய்க்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தி லுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவ லகங்களுக்கும், கல்வி நிறு வனங்களுக்கும் இந்த விடு முறை பொருந்தும். ஆயினும் பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் தேர்வுகள் நடைபெறு வதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடு முறையினை ஈடுசெய்யும் பொருட்டு ஏப்.30 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவ னிக்கும் பொருட்டு, மாவட் டத்திலுள்ள அரசு அலுவல கங்கள், கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங் கள் குறிப்பிட்ட பணியாளர் களைக் கொண்டு செயல்ப டும் என திருச்சி மாவட்ட ஆட்சி யர் சிவராசு தெரிவித்துள்ளார்.