districts

img

சிபிஎம், மாதர் சங்கம் நடத்திய சமத்துவப் பொங்கல் விழா

புதுக்கோட்டை/பெரம்பலூர், ஜன.15 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகரக் குழு சார்பில் புதுக்கோட் டையில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்ற சமத்துவப்  பொங்கல் விழாவிற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகரத் தலை வர் ஆர்.நிரஞ்சனாதேவி தலைமை  வகித்தார். பொங்கல் விழாவை புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் நளினி தொடங்கி வைத்தார். விழாவில், புதுக்கோட்டை மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாநகரச் செயலாளர் முத்து மாரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் மைதிலி  கஸ்தூரி ரெங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் சிஐடியு பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் செவ்வாய்க் கிழமை பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத் தம் முன்பு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு சிஐ டியு தொழிற்சங்க மாவட்டச் செய லாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். விழாவில் நிர்வாகிகள் ரெங்கநாதன், பெரியசாமி, விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் போட்டியில் விளையாடிய மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா மாவட்ட  ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமை யில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப் பினர் ம.பிரபாகரன் முன்னிலை யில் நடைபெற்றது.  அரசு அலுவலர்கள் பங்கு பெற்ற சமத்துவ பொங்கல் விழா வில், ரங்கோலி கோலப்போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல், தண்ணீர் நிரப்புதல், உரி அடித்தல்,  ஊசி நூல் கோர்த்தல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டு போட்டிகளில் அரசு அலுவ லர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  லெமன் ஸ்பூன் கொண்டு செல்லுதல் போட்டியில், அரசு அலு வலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.  பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சி யர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னர் பரிசுகளை வழங்கினர்.