தென்காசி. ஆக. 23
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் கிளைச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயலாளர் உ. முத்துப்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, தாலுகா செயலாளர் அயூப்கான்,மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முன்னதாக சங்கை மதியழகன் குழுவி னரின் நாடகம், கரிசல் தண்டாயுதபாணி குழுவினரின் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.