. திருச்சிராப்பள்ளி, பிப். 7 - திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஞாயிறன்று காலை திருச்சி சுப்பிரமணியத்தின் உள்ள அவ ரது அலுவலகத்தில் இருந்து மணப்பாறையை அடுத்த வையம் பட்டி காவல் நிலையத்திற்கு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அவரின் பாதுகாப்பிற்காக இரண்டு போலீஸ் வாகனங்களும் பின்தொடர்ந்து சென்றன. திருச்சி யில் காலை 6 மணிக்கு சைக்கிளில் புறப்பட்ட அவர், காலை 8.30 மணிக்கு வையம்பட்டி காவல் நிலையத்தை சென்றடைந் தார். பின்னர் மீண்டும் அங்கிருந்து சைக்கிள் மூலம் திருச்சி நோக்கி புறப்பட்டார். மொத்தம் 120 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.