திருச்சிராப்பள்ளி, அக்.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட் டம் தா.பேட்டை ஒன்றிய 16 ஆவது மாநாடு செவ்வா யன்று தா .பேட்டையில் நடந்தது. மாநாட்டிற்கு சேகர், செல்லப்பெருமாள், மரகதம் ஆகியோர் தலைமை வகித் தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் தங்கராசு ஏற்றினார். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பி னரும், மாநிலக்குழு உறுப்பி னருமான எம்.சின்னதுரை துவக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் சிவராஜ் வாழ்த்துரை வழங்கினார். தா.பேட்டை புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தா.பேட்டை, மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவ மனையில் எம்.டி. மருத்து வரை நியமித்து 24 மணி நேரமும் செயல்ப டுத்திட வேண்டும். மேட்டுப் பாளையத்தில் புதிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். துளையாநத்தம் ஜம்புநாதபுரத்தில் உள்ள இரும்பு ஆலையிலிருந்து வெளியேறும் புகையினை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தா.பேட்டை ஒன்றியச் செயலாளராக எஸ்.பாண்டி யன் உள்பட 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் நிறைவுரையாற்றி னார். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் சந்திர மோகன் வரவேற்றார். 6 ஆவது வார்டு சிபிஎம் கவுன் சிலர் சத்யா நன்றி கூறினார்.