திருச்சிராப்பள்ளி,அக்,21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லால்குடி ஒன்றிய 24 வது மாநாடு ஞாயிறு அன்று லால்குடியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மணிமொழி, குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடி யை மூத்த தோழர் லூர்துசாமி ஏற்றினார். மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றியச்செயலாளர் பாலமுருகன் முன்வைத்தார். மாநாட்டில் லால்குடி -கிளிக்கூடு கொள்ளிடக்கரைப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்; லால்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லால்குடி ஒன்றியச்செயலாளராக எஸ். மார்ட்டின் தேர்வு செய்யப்பட்டார். 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் நிறைவுரையாற்றினார். முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் மார்ட்டின் வரவேற்றார். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் நன்றி கூறினார்.