மயிலாடுதுறை, அக்.28 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மயிலாடு துறை மாவட்டம் வைத்தீஸ்வ ரன் கோவிலில் சீர்காழி ஒன்றிய மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் நாகையா ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் உரையாற்றினார். சீர்காழிக்கு புதிய வட்டாட் சியர் அலுவலகத்தை கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன. 8 பேர் கொண்ட ஒன்றி யக் குழு தேர்வு செய்யப் பட்டு புதிய ஒன்றியச் செய லாளராக வழக்கறிஞர் எஸ். ஞானபிரகாசம் தேர்வு செய் யப்பட்டார். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் நிறைவுரை யாற்றினார். ஒன்றியச் செய லாளர் வழக்கறிஞர் எஸ்.ஞானபிரகாசம் நன்றி கூறி னார்.