அரிமளம் ஒன்றியச் செயலாளராக ஆர்.வி.ராமையா தேர்வு
புதுக்கோட்டை, அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றி யச் செயலாளராக ஆர்.வி. ராமையா தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிமளம் ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை அரிமளத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு எம். அடைக்கப்பன், கே. வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சிக் கொடியை மூத்த தோழர் எம்.மாயாண்டி ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் எம். அடைக்கப்பன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ். ஜனார்த்தனன் உரையாற் றினார். வேலை அறிக் கையை ஒன்றியச் செயலா ளர் ஆர்.வி.இராமையா முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. அன்புமணவாளன், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக ஆர்.வி.ராமையா தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் நிறைவுரை யாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.மணி நன்றி கூறினார்.
கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளராக ஜி.பன்னீர்செல்வம் தேர்வு
புதுக்கோட்டை, அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலா ளராக ஜி.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை புனல் குளத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கே.சித்தி ரைவேல், கே.சுதா, எம்.அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சிக் கொடியை மூத்த தோழர் பி. கோவிந்தராசு ஏற்றி வைத் தார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சித்திரை வேல் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக ஜி. பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ உரையாற்றினார். ஒன்றி யச் செயலாளர் ஜி.பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.
முசிறி ஒன்றியச் செயலாளராக எஸ்.அசோக் தேர்வு
திருச்சிராப்பள்ளி, அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றிய 16 ஆவது மாநாடு செவ்வாயன்று முசி றியில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் சத்யராஜ், விஜயலட்சுமி, தர்மலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் கிருஷ்ணன் ஏற்றி னார். ஒன்றியக்குழு உறுப்பி னர் ராமச்சந்திரன் வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் துவக்க உரையாற்றினார். முசிறி அரசு மருத்துவ மனை மற்றும் முசிறி ஒன்றி யத்தில் உள்ள ஆரம்ப சுகா தார நிலையங்கள் அனைத் தையும் தரம் உயர்த்த வேண்டும். சிவந்திலிங்க புரத்திலிருந்து தண்ணீர் பள்ளி வரை காவிரியில் தடுப்பணை கட்ட வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பஞ்சாயத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முசிறி ஒன்றியச் செயலா ளராக எஸ். அசோக் உள்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன் நிறை வுரையாற்றினார். ஒன்றிய குழு உறுப்பினர் சுப்ரமணி யன் நன்றி கூறினார்.
வையம்பட்டி ஒன்றியச் செயலாளராக பி.வெள்ளைச்சாமி தேர்வு
திருச்சிராப்பள்ளி, அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றிய 6 ஆவது மாநாடு செவ்வா யன்று வையம்பட்டியில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் பிரேம் குமார், சகாயராணி, செல்லதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் வீரமணி ஏற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் துவக்க உரையாற்றினார். கடலுக்கு செல்லும் காவிரி உபரிநீரை மாயனூர் தடுப்பணைக்கு கொண்டு வந்து அதிலிருந்து பொன் னணி ஆறு அணைக்கு கொண்டு வர வேண்டும். வையம்பட்டி ஒன்றியத்தில் வாசனை திரவிய தொழிற் சாலை, காய்கறி பதப்படுத்த குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. வையம்பட்டி ஒன்றியச் செயலாளராக பி.வெள்ளைச் சாமி உள்பட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புற நகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் நிறைவுரை யாற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆரோக்கியம் நன்றி கூறினார்.
தா.பழூர் ஒன்றியச் செயலாளராக ராதாகிருஷ்ணன் தேர்வு
அரியலூர், அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட் டம் தா.பழூர் 9 ஆவது ஒன்றிய மாநாடு தா.பழூரில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பி னர் எஸ்.சிலம்பரசன், வி.லெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட் டுக் கொடியை மூத்த நிர்வாகி தர்மலிங்கம் ஏற்றி னார். ஒன்றியக் குழு உறுப் பினர் டி.செல்வராஜ் வர வேற்றார். மாநாட்டை மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.வெங்கடாசலம் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் 9 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப் பட்டு, புதிய ஒன்றியச் செய லாளராக ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். குருவாடி தலைப்பு தடுப்பணை கட்ட வேண்டும். தா.பழூர் - சுத்தமல்லி சாலையில் பொதுமக்கள் பாதிப்பு வரக்கூடிய டாஸ் மாக் கடையை அப்புறப் படுத்த வேண்டும். முட்டு வாஞ்சேரியில் இருந்து கும்பகோணம் செல்ல பேருந்து இயக்க வேண்டும். மதனத்தூர் பாலத்தில் இருந்து அணைக்கரை வரை கொள்ளிடம் வட புறம் உள்ள கரையில் கிரா வல் சாலையை தார்ச்சாலை யாக தரம் உயர்த்த வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினர் லட்சுமி நன்றி கூறினார்.
அரியலூர் ஒன்றியச் செயலாளராக அருண் பாண்டியன் தேர்வு
அரியலூர், அக்.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றிய மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. கட்சிக் கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் மலர்கொடி ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம் வரவேற்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் 9 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டு, புதிய ஒன்றியச் செயலாளராக அருண்பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எம்.கந்தன் நன்றி கூறினார்.