districts

ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

திருவாரூர், மே 11-

    திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்  கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது.

    திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி, நீடாமங்க லம், மன்னார்குடி, கோட்டூர், திருத் துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வசந்தன், செயலாளர் கே.எஸ்.செந்தில், பொருளாளர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் அனைவரும் விடுப்பு விண்ணப்பம் வழங்கி போராட்டத்தில் பங்கேற்றனர்.