districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

திருவாரூர், மார்ச் 3-  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெரும் திட்ட வளாகம் பகுதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட அலு வலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டத்  தலைவர் என்.வசந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் வே.வாசுதேவன், ஏ.தமிழ்செல்வன், டி.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநிலத் தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன் கொடி ஏற்றினார். மாநிலச் செயலாளர் அ.சவுந்தரபாண்டியன் கல்வெட்டை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கட்டிடத்தை மாநிலப் பொதுச்செய லாளர் ச.பாரி திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கத்தின் அலுவலக கட்டடத்தை மாநிலப் பொருளாளர் மா.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, அமைப்பின் மாநிலச் செயலாளர்கள் அ.சௌந்தரபாண்டியன், ஐ.ஜம்ரூத்நிஷா, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.