கும்பகோணம், ஏப்.12 - கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் அரசு மதுபான கடை பார் ஒப்பந்தக்காரராக இருந்தார். இவரை, கடந்த 2013 ஆம் ஆண்டு கும்பகோணம் அருகே மாடாகுடி புது பாலத் தில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ரவுடி ராஜா என்ற கட்டை ராஜா, இவரது நண்பர்கள் மாரியப்பன், ஆறுமுகம், மனோகரன், செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து அரி வாளால் வெட்டி படு கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து பட்டீஸ் வரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இப்படுகொலை தொடர் பாக கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் பெஞ்ச மின் விசாரணை நடத்தி, செந்தில்நாதனை படு கொலை செய்த ராஜா என்ற கட்டைராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்ப ளித்தார். மேலும் வழக்கு நடந்தபோது குற்றவாளி களான மாரியப்பன், மனோ கரன் ஆகியோர் இறந்து விட்டதால், மீதமுள்ள ஆறு முகம், செல்வம் ஆகியோ ருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தூக்கு தண்டனை விதித்த கட்டைராஜா மீது தமிழ கத்தில் 14-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலு வையில் உள்ளன. 150 ஆண்டுகளாக செயல் படும் கும்பகோணம் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப் பது இதுவே முதல்முறை.