புதுதில்லியில் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு தேசிய விருது விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கரூர் மண்டலம் குளித்தலை கிளையில் பணிபுரியும் ஓட்டுநர் ரவிச்சந்திரனுக்கு விபத்து இல்லாமல் சிறப்பாக பணி புரிந்ததமைக்காக சிறந்த ஓட்டுநருக்கான விருதினை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வழங்கினார். விருது பெற்ற ஓட்டுநர் ரவிச்சந்திரன் கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரனிடம் வாழ்த்துப் பெற்றார்.