சேதுபாவாசத்திரம், ஆக.10-
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ரூ. 2.70 கோடியிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ என். அசோக்குமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரம் கடற்கரை சாலை, முதலமைச்சர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 77 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலும், அதனைத் தொடர்ந்து சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத் தலம் செல்லும் சாலை ரூ. 91 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பி லும், புதுப்பட்டினம் ஊராட்சி வெளிவயல் கிராம தார்ச்சாலை ரூ. 42 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும்,
ஆண்டிக்காடு ஊராட்சியில் ஆதிதிராவிடர் சாலை முதல்வர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலும், அழகியநாயகிபுரம் ஊராட்சி எரளிவயல் சாலை ரூ.21 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 2.70 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை எம்எல்ஏ அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடை யப்பன், கந்தசாமி, ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை, திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலா ளர் வை.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுதாகர், பாமா செந்தில், சாகுல்ஹமீது, ஊராட்சித் தலைவர்கள் ஏ. பாலு (குப்பத்தேவன்), ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா (சரபேந்திரராஜன் பட்டினம்), அமீர் முகைதீன் (புதுப்பட்டினம்), நாகூர் மீரா (அழகியநாயகிபுரம்), வரதராஜன் (ஆண்டிக்காடு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.