districts

img

பஞ்சாத்தி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி எஸ்.டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

அறந்தாங்கி, டிச.13– புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பஞ்சாத்தி ஊராட்சியில் உள்ள அங்காளம்மன் கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக  இருப்பதாக அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் நபார்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பணியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன்  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆவுடையார் கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து மற்றும்   அறந்தாங்கி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொன் கணேசன், அறந்தாங்கி காங்கிரஸ் நகர தலைவர் வீராசாமி,  அறந் தாங்கி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் மற்றும் ஊர்வணி ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்