திருச்சிராப்பள்ளி, ஏப்.11 - பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திங்களன்று திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சங்க மாநிலச் செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் கோபிநாத், துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மணி கண்டம் ஒன்றிய தலைவர் குமார் ஆகி யோர் பேசினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். குத்தாலம் ஒன்றியச் செய லாளர் சண்முகம், மயிலாடுதுறை பொருளா ளர் சொக்கலிங்கம், சீர்காழி செயலாளர் புரு ஷோத்தமன், தரங்கம்பாடி ஒன்றிய செயலா ளர் கோவிந்தசாமி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத் தலைவர் சீனி.மணி போராட்டத்தை வாழ்த்தி பேசினர். மயிலாடுதுறை வட்ட துணைத் தலைவர் சிதம்பரம் நன்றி கூறினார்.