districts

ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

அறந்தாங்கி, மே 12-

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள  பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் நகராட்சி  அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர்.  

    அப்போது ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்பட்ட 250  கிலோ மாம்பழங்கள், அழுகிய இதர பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.  இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும்  விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்ற ரசாயனம் கலந்த  பழங்களை விற்றால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது