districts

பொன்னமராவதியில் வருவாய் தீர்வாயம்

பொன்னமராவதி, ஜூன் 22-

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவல கத்தில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை யில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 15,16, 20 ஆகிய 3 நாட்கள்நடைபெற்றன.

     இதில், மக்களிடமிருந்து பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு மாறுதல்,  வீட்டு மனை பட்டா கோருதல், நில அளவை செய்ய கோருதல் உள்ளிட்ட  இதர துறை மனுக்கள் என 403 மனுக்கள் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை குடிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  விழா நடைபெற்றது. இதில், 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வழங்கினார். வட்டாட்சி யர் பிரகாஷ், தனி வட்டாட்சியர் வெள்ளைச்சாமி, வட்ட துணை ஆய்வா ளர் கார்த்திகேயன், துணை வட்டாட்சியர்கள் சேகர், திலகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.