districts

img

திருக்கடையூரில் கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் 4 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

மயிலாடுதுறை, டிச.24-  மயிலாடுதுறை மாவட்டம்,திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து 4 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.  இரவு-பகலாக தொடரும் போராட்டத்தை அலட்சியமாக கருதும் மாவட்ட ஆட்சியர்,கோட்டாட்சியர்,வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலை த்துறையினரை கண்டித்தும், காலங்காலமாக கோயில் பெயரிலான இடங்களில் குடியிருக்கும் ஏழைகளின் வீடுகளை இடித்து தள்ளிவிட்டு வெளியேற்ற துடிக்கும் வில்ஸ்பன் என்கிற ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும்,நிலங்கள் மற்றும் வீடுகளுக்குரிய இழப்பீட்டையும் ஒட்டுமொத்தமாக பெற்றுள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாகவும் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. நான்காவது நாளாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆவேசமான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போராட்டப் பந்தலிலேயே கஞ்சி காய்ச்சினர்