districts

வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கரூர், மே 28-

    தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்  கரூரில் உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட ரங்கில் மாவட்டத் தலைவர் எம்.வைரப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.  

     சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம். எஸ்.அன்பழகன், மாநில துணைத்தலை வர் கு.குமரேசன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டச் செயலாளர் ஆர்.சண்முகம், மாவட்டப் பொருளாளர் த.சந்துரு  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   கூட்டத்தில், கரூர் மாவட்ட வருவாய் அலகில் துணை ஆட்சியர்களாக பணி யாற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சி யர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின நல அலுவலர், மாவட்ட வழங்கல் மற்றும்  நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலர், மாவட்ட மேலாளர்  தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ் மாக்), கரூர் வருவாய் கோட்டாட்சியர் ஆகி யோர் அலுவலக நடைமுறையை மீறி செயல் பட்டு ஊழியர் விரோதப் போக்கினை கடைப்பிடிக்கும் நடைமுறையை அமல் படுத்து வருகின்றனர். இதனை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கரூர்  மாவட்ட குழு வன்மையாக கண்டிப்பதோடு, இச்செயலை உடனடியாக கைவிட வேண்டும். மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாக சம்பந்தப்பட்ட துணை  ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.  

    இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மே 30 அன்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டமும், ஜூன் 6 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்ட கிளைகளிலும் அரசு அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும். மூன்றாம் கட்டமாக ஜூன் 14 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாபெரும்  தொடர் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டது.