districts

img

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா

புதுக்கோட்டை, ஏப்.17-  

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்  கோட்டை திலகர் திடலில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் திங்கட்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் நல சங்க மாவட்டத் தலை வர் இரா.சரவணன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஆ.கணேசன் வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தி.சிதம்பரம் உள்ளிட்டோர் பேசினர்.  மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணன் நன்றி  கூறினார்.

போராட்டத்தில், அகவிலைப்படி உயர்வை நிலு வையின்றி வழங்க வேண்டும், 70 வயதான வர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 விழுக்காடு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.