districts

img

மாவட்டங்கள் தோறும் காந்தி சிலைக்கு மரியாதை

அக்டோபர் 2 தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனொரு பகுதியாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மக்கள் ஒற்றுமை மேடை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் காந்தியடிகளின் உருவப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

;