புதுக்கோட்டை, மே 21-
ரிசர்வ் வங்கி எடுக்கின்ற முக்கிய முடிவுகள் மாநில அரசுகளின் ஆலோசனைகளையும் பெற்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் நிதி மன்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கி வைக்க வருகை தந்த புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, அது இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தது. இந்த நடவடிக்கையை திமுக கடுமையாக எதிர்த்தது. தற்பொழுது 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மாநில அரசுகளின் ஆலோசனைகளை யும் பெற்று எடுக்க வேண்டும். அப்படி எடுத்து இருந்தால் இதுபோன்ற குளறுபடிகளைத் தவிர்த்து இருக்க முடியும். வருங்காலங்களிலாவது ரிசர்வ் வங்கி இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.