தஞ்சாவூர், டிச.17 - 12 ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள், சாக்கு மூட்டையில் கட்டி கோவில் குளக் கரையில் போட்டு விட்டு சென்றது குறித்து காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர். தஞ்சாவூர் பூக்குளம் பகுதியில், சத்திரம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான வேதவள்ளி சமேத நாகநாதர் கோவில் உள்ளது. இங்கு தினேஷ் என்பவர் அர்ச்சகராக உள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மார்கழி மாதம் முதல் நாள் என்பதால், பூஜை செய்வதற்காக அதிகாலையிலேயே தினேஷ் கோவிலை திறந்தார். அப்போது, ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப் பட்டு உள்ள அறையின் பூட்டு உடைக்கப் பட்டு, ஒரு அடி முதல் இரண்டு அடி வரை உயரம் கொண்ட நடராஜர் சிலை, சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகர், அஸ்திரதேவர், பைரவர், பிச்சாடனார், சுவாமி அம்பாள் சிலை கள் 2, நால்வர் சிலைகள் 4 என மொத்தம் 12 சிலைகள் திருடி போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ், தஞ்சாவூர் நகர மேற்கு காவல்துறைக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த காவல்துறை யினர், கோவிலின் நுழைவு வாயில் திறக்கப் படாமல், மர்ம நபர்கள் எந்த வழியாக வந்தனர் என ஆய்வு செய்தனர். அப்போது, கோவி லின் பின்பகுதி வழியாக மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களின் கால் தடம் சுவரில் பதிந்திருந்தது. தொடர்ந்து, காவல்துறையினர் மர்ம நபர்களின் கால்தடம் பதிவான பகுதி வழியாக கோவிலின் பின்பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்குள்ள பிட்டாசு குளத்தின் கரை யில், சாமி சிலைகள் சாக்கு மூட்டையில் கட்டி கிடந்தன. பின்னர் சிலைகளை கோவி லுக்கு கொண்டு வந்து, பூஜைகள் செய்து பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டப் பட்டன. இதுகுறித்து மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, சிலைகளை கொள்ளை யடித்த நபர்களை தேடி வருகின்றனர். கோவிலில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில், கொள்ளையர்கள் சிலைகளை விட்டுச் சென்றதால் அவை தப்பின.