districts

img

தபால்கள் உடனடியாக மக்களுக்கு கிடைத்திட அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்திடுக!

கரூர்,ஆக.21- தமிழ்நாடு அரசு அனை த்து துறை ஓய்வூதியர் சங் கத்தின் கரூர் மாவட்ட  7ஆவது மாவட்டப்பேரவை கூட்டம் கரூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் து.சாமுவேல் சுந்தரபாண்டி யன் தலைமை வகித்தார்.கரூர் வட்டச் செயலாளர் பாலகுமாரன்  வரவேற்று பேசினார்.   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில முன்னாள் துணைத்தலைவர் எம்.சுப்பிரமணியன்,   மாநில துணைத்தலைவர்  ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன்.ஜெய ராம்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 ஆயிரத்தை கூட்டத்தில் வழங்கினர்.  திருவாரூர் மாநில பேரவை நிதியாக 5000 ஐ மாநில துணைத்தலைவர்  சுப்பிரமணியனிடம் வழங்கப் பட்டது. தலைவராக து.சாமு வேல் சுந்தரபாண்டியன்,  மாவட்டச் செயலாளராக கெ. சக்திவேல், மாவட்டப் பொ ருளாளராக சோமசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். வட்டத் தலைவர்  பரிமள லட்சுமி நன்றி கூறினார்.  கரூர் மாவட்ட அஞ்சல் துறையில் வரும்  தபால்கள் உரியவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது இல்லை. காலம் தாழ்த்தி வழங்கும் தபால்கள் பல் வேறு இழப்பு ஏற்படுகிறது. எனவே உடனடியாக தபால் கள் பொதுமக்களுக்கு கிடைத்திட கரூர் மாவட்ட அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு  பெற்ற சத்துணவு, அங்கன் வாடி, கிராம உதவியாளர்க ளுக்கு குறைந்த பட்சம் ஓய்வூ தியம் ரூபாய் 7 ஆயிரத்து 850 ஐ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறை வேற்றப்பட்டன.