districts

img

மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை கால தாமதமின்றி வழங்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் தலைமையில் திருச்சி,  புதுக்கோட்டை. அரியலூர், பெரம்ப லூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் பேசியதாவது:  “மக்களுக்கு சேவை செய்கிற முக்கியத் துறையாக வருவாய்த்துறை உள்ளது. இத்துறையின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் பயன் பெறும் வகையில் பணியாற்றிட வேண்டும்.  மாணவர்களுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி சான்றிதழ்களை வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற் போது பள்ளிகள், கல்லூரிகள் திறந்து  நடைபெறுகிற நிலையில் மாணவர் களுக்குத் தேவையான சான்றிதழ் களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட வேண்டும். இதேபோல், மாதாந்திர உதவித் தொகை வழங்கு தல், பல்வகை திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் வருவாய்த்துறையின் அனைத்து சேவைகளையும் அரசு வழிகாட்டுத லின்படி மக்களுக்கு விரைந்து கிடைத் திடும் வகையில் வருவாய்த்துறை அலு வலர்கள் பணியாற்றிட வேண்டும்” என்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன்,  நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கர சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் பிரபா கர், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், கந்தர்வகோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் வரு வாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.