மயிலாடுதுறை, மார்ச் 18 - மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி காத்தி ருப்பு போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் அதி காரிகள், மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் நிர்வாகிக ளிடையே நடந்த பேச்சு வார்த்தையில், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வைத்தி ருக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு பாஸ் உடனுக்குடன் வழங்கப்படும். மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா மருத்து வமனைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ் வழங்கப்படும். மாற்றுத்திற னாளிகளுக்கு உரிய மருத்து வர்களை கொண்டு ஊன முற்ற சதவீதம் நிர்ணயிக்கப் படும். மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் மருத்துவ சான்று வழங்கப்ப டும் என உடன்பாடு ஏற்பட்டு எழுத்துப்பூர்வமாக உறுதி யளிக்கப்பட்டது. இதையடுத்து போராட் டத்தை கைவிட்டனர். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் டி. கணேசன், வட்டத்தலைவர் ராஜேந்திரன், வட்ட பொரு ளாளர் சொக்கலிங்கம், தரங்கம்பாடி வட்ட செயலா ளர் டி.கோவிந்தசாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.